tamilnadu

img

அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி

பாலசோர்,நவ.17- 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-2 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் பால சோர் நகரில் கடலோர பகுதியில் இந்தியாவின் அக்னி- 2 ரக ஏவுகணை பரிசோதனை சனிக்கிழமை யன்று நடைபெற்றது. இந்த ஏவுகணை 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கொண்ட இலக்கையும் தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இரவு நேரத்தில் நடந்த  ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

;